ஐக்கிய தேசிய கட்சியின் அறுபத்து ஒன்பதாவது ஆண்டு நிறைவு இன்றாகும் இதனையொட்டி அக்கட்சி விஷேட சம்மேளனம் ஒன்றை நடத்துகிறது.கொழும்பில் உள்ள சிரிக்கொத்த கட்சி தலைமையகத்தில் பிரதமர் ரணில் தலைமையில் இடம்பெறும் இந்த சம்மேளனத்துக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் அழைக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்த கட்சி சம்மேளனத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொள்வார் என தெரிவிக்கபடுகிறது.
ஐக்கிய தேசிய கட்சி நடத்தும் கட்சி சம்மேளனம் ஒன்றில் சுதந்திர கட்சி தலைவர் ஒருவர் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளும் முதல் சந்தர்ப்பம் இது என தெரிவிக்கபடுகிறது.
குறித்த நிகழவில் ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணியில் இணைந்துகொண்ட கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கபடுகிறது.
