ரோசி சேனாநாயக்க, பிரதமர் ரணிலின் ஊடகப் பேச்சாளராக நியமனம்!
Written By Admin: Arankamnews on | 9/12/2015 06:23:00 PM
சிறுவர் அபிவிருத்தி முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஊடகப்பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் அவர், பிரதமர் அலுவலகத்தின் பிரதி தலைமையதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த பொதுத்தேர்தலில் கொழும்பில் போட்டியிட்ட ரோசி தோல்வியடைந்தார்
இதன் பின்னர் தமது விருப்புத் தெரிவு வாக்குகளை மீளெண்ண வேண்டும் என்று அவர் கோரிய போதும் அந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
